
நம் சந்ததிக்காக பணம், வீடு, நிலம், என்று நம்மால் முடிந்தவரை சேர்த்து வைக்கவே அனைவரும் ஆசை படுகிறோம். ஆனால் அவற்றை அனுபவிக்க மாசில்லாத பூமி வேண்டும் என்பதை மறந்து விடுகிறோம்.
இந்த பூமி ஒன்றும் நமக்கு மட்டுமே சொந்தமானது இல்லை. இது நம்முடைய வாடகை வீடு. நமக்கு பிறகு அனுபவிக்க போகிறவர்கள் நம் சந்ததிகள் தானே.
அவர்களுக்காக இந்தபூமியை சொர்கமாக மாற்றி கொடுக்காவிட்டாலும், நரகமாக்காமல் இருப்போமே!
இப்பொழுது நாம் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது போல் அவர்கள் காற்றை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்தை அவர்களுக்கு தராமல் இருப்போம்.
கோடி கோடியாய் பணம் இருந்தாலும் விலை கொடுத்து வாங்க காற்று இருந்தால் தானே அவர்களால் உயிர் வாழமுடியும் .
மனித குலம் இன்னும் சில தலைமுறைகள் பூமியில் வாழ நம்மால் இயன்றதை செய்வோம்.
இந்த வாடகை வீட்டை பாழாக்காமல் நம் சந்ததிகளிடம் சேர்ப்போமே!!
No comments:
Post a Comment